பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

விழா நாள்களில் பூக்கும்

இறைவழிபாட்டில் பூக்களுக்கு முக்கியத்துவம் உண்டு. ஆனால், இறைவனுக்கே உரிய பூக்கள் சில உண்டு.

News image
Updated On :27 செப்டம்பர் 2025, 7:46 pm IST

இறைவழிபாட்டில் பூக்களுக்கு முக்கியத்துவம் உண்டு. ஆனால், இறைவனுக்கே உரிய பூக்கள் சில உண்டு. அவை அதிசயமாக, குறிப்பிட்ட ஆண்டு, மாத, நாள் இடைவெளியில் பூக்கும். ஆனால், 'விஷ்ணு கமலம்' என்ற அதிசயப் பூ விழா நாள்களிலேயே பூக்கும் என்றால் ஆச்சரியம் அளிக்கிறது.

வேலூர்- திருப்பத்தூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ள நரியம்பட்டு கிராமத்தில், தென்னை மரங்கள் நிறைந்த இயற்கைச் சூழலில் அமைந்த, வழக்குரைஞர்கள் ஏ.என்.பத்மநாபன், சி.ஜெயந்தி பத்மநாபன் தம்பதியின் வீட்டில் மகாளய அமாவாசையன்று இந்தப் பூ பூத்தது.

எம்.எல்.ஏவாக இருந்துள்ள சி.ஜெயந்தி பத்மநாபன் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்டவர். அவரிடம் பேசியபோது:

Story image

'ஹைதராபாத்தில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன் 'விஷ்ணு கமலம்' செடியை வாங்கி வந்து, எங்கள் வீட்டில் நட்டேன். நன்கு வளர்ந்துள்ளது. இந்தச் செடி வளர்வதே இறைநம்பிக்கையில்தான்! மண்வளமோ, நீர்வளமோ காரணம் கிடையாது. இந்தச் செடியில் ஒற்றைப் பூவே பூக்கும். அதிலும், விழா நாள்களிலேயே பூக்கும். வரலட்சுமி விரத நாளன்று பூ பூத்தது. தற்போது மகாளய அமாவாசையன்று பூத்தது. இந்தப் பூவில் சிவலிங்கமும் இடம்பெற்றிருக்கும்.

சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒருசேர அமைந்துள்ளதே இந்தப் பூவின் மகிமை.

Story image

பவளமல்லி, மனோரஞ்சிதம், பாரிஜாதம், பச்சை சம்பங்கி, முல்லை, ஜாதிமல்லி, காஞ்சிபுரம் மல்லி, எட்டடுக்கு மல்லி, ஐந்து நிறங்களில் செம்பருத்தி, நந்தியாவட்டை, இட்லி பூ, தொட்டிப் பூ, நாட்டு ரக ரோஜா, மருதாணி, மலேயா ஆப்பிள், சப்போட்டா, கொய்யா, மாம்பழம், வாழைக்காய், ரஸ்தாலி பழம், கற்பூரவள்ளி, வாழைக்காய், நாட்டு அத்திப்பழம், நாட்டு மஞ்சனத்தி, ஆடாதொடா மூலிகை, ஆடுதீண்டாப்பாளை, கன்னி என்கின்ற கற்றாழை, புனிதத்துவம் வாய்ந்த துளசி, நாட்டு பாதாம், அனைத்து வகையான முருங்கை, நாட்டு பப்பாளி, சிறு மூலிகைகள் போன்றவை எனது இல்லத்தில் வைத்து, வளர்த்து வருகிறேன்.

இயற்கை முறையில் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், பழங்களை இங்கேயே விளைவித்துக் கொள்கிறோம்.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழியில், எங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டு அடுத்தவர்களுக்கும் கொடுத்து இன்பமான சூழ்நிலையை அமைத்து வாழ்கிறோம்'' என்கிறார் ஜெயந்தி பத்மநாபன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.