மதிமுக உயர் நிலைக் குழு கூட்டம்! சீர்காழி எம்.எல்.ஏ. ஆப்சென்ட்!கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஜூன் 26 இன்று தங்கம் வாங்கலாமா? என்ன சொல்கிறது விலை நிலவரம்?ஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

பெரிசு...

உலகில் மிகப் பெரிய அளவில் பேசப்படும் விஷயங்கள் சிலவற்றை அறிவோம்.

News image
Updated On :8 பிப்ரவரி 2026, 4:19 pm IST

உலகில் மிகப் பெரிய அளவில் பேசப்படும் விஷயங்கள் சிலவற்றை அறிவோம்.

தேர்

தமிழ்நாட்டில் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் தேர் 96 அடி உயரமும், 300 டன் எடையும் கொண்ட மிகப் பெரிய தேராகும். இதன் சக்கரங்கள் பழுதுபட்டு விட்டதால், 1948-ஆம் ஆண்டில் இருந்து ஓடவில்லை. இது மீண்டும் 1975-ஆம் ஆண்டு திருச்சி பெல் தொழிற்சாலை யில், இரும்புச் சக்கரங்கள், கிரேன் பொருத்தப்பட்டு, மீண்டும் ஓடத் தொடங்கியது.

பள்ளி

உத்தரப் பிரதேசத்தில் லக்னோ நகரில் உள்ள 'தி சிட்டி மாண்டிசோரி ஸ்கூல்' எனும் பள்ளியில்தான் உலகிலேயே அதிக அளவிலான மாணவர்கள் பயில்கிறார்கள். தொடக்கத்தில் ஐந்து மாணவர்களே இங்கு படித்தனர். 2012-ஆம் கல்வியாண்டில் 45 ஆயிரம் மாணவர்கள் பயிலும் பள்ளியாக உயர்ந்தது. ஜெகதீஷ் காந்தி என்பவர் 1959-ஆம் ஆண்டு ரூ.300 முதலீட்டில் இந்தப் பள்ளியைத் தொடங்கினார். தற்போது பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகுப்பறைகள் உள்ளன.

ரயில்

ரஷியாவில் உள்ளது டிரான்ஸ்-சைபீரியன் ரயில் பாதையாகும். 1891-ஆம் ஆண்டு மே மாதத்தில் பசிபிக் கடற்கரையில் விளாடி வாஸ்டாக் துறைமுகத்தில் ஜார் மன்னர் மகன் நிக்கோலாஸ் அடிக்கல் நாட்டினார். தலைநகர் மாஸ்கோவில் இருந்து விளாடி வாஸ்டாக் வரையில், 10,672 கி.மீ. நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது. மாஸ்கோவில் புறப்பட்டு, விளாடி வாஸ்டாக் சென்று அடைய 9 நாள்கள் ஆகும். இதில், மொத்தம் 97 ரயில் நிறுத்தங்கள் உள்ளன.

மிகப்பெரிய ரயில் நிலையம் நியூயார்க் நகரில் உள்ள கிரான்ட் சென்ட்ரல் நிலையமாகும்.

உலகில் ரயில் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவோர் உள்ள நாடுகள்: ஜப்பான், இந்தியா, ஜெர்மனி.

சில நாடுகளில் சமதள பரப்பு கிடையாது. இதனால், மிகவும் குறைந்த அளவிலான ரயில் பாதைகளைக் கொண்டுள்ளது. அதில் வாடிகன் சிட்டி-1.27 கி.மீ., லெசோதா- 1.6 கி.மீ., மொனாக்கோ- 1.7 கி.மீ., லாவோஸ் 3.5 கி.மீ., நவுரு- 3.9 கி.மீ.

எல்லைக்கோடு

சர்வதேச எல்லைக்கோடுகள் அதிகம் உள்ள நாடுகள்:

இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே முஷ்கோவ் பள்ளத்தாக்கில் 'ரெட்கிளிப் எல்லைக்கோடு' உள்ளது. சர் சைரிஸ் ரெட் கிளிப் என்பவரால், 1947-இல் இது அமைக்கப்பட்டது.

 இந்தியா, சீனாவைப் பிரிக்கும் 'மெக்மோகன்' எல்லைக்கோடு சர் ஹென்றி மெக்மோகன் என்பவரால் உருவாக்கப்பட்டது. இதன் நீளம் 1,120 கி.மீ. ஆகும்.

ஒன்றுபட்ட இந்தியா- பாகிஸ்தான் இணைந்திருந்தபோது, இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு இடையே 'குராண்ட் எல்லைக்கோடு' ஏற்படுத்தப்பட்டது. இதன் நீளம் 2,640 கி.மீ. ஆகும்.

வட கொரியாவையும், தென் கொரியாவையும் '38-ஆவது பார்லஸ்' எனும் எல்லைக்கோடு பிரிக்கிறது.

பர்மா, தாய்லாந்து, லாவோஸ் நாடுகளின் எல்லைகள் கூடும் இடம் 'தங்க முக்கோணம்' என்று அழைக்கப்படுகிறது.

 அமெரிக்காவையும் கனடாவையும் '49-ஆவது பார்லஸ்' எனும் எல்லைக்கோடு பிரிக்கிறது.

பிரான்ஸையும் ஜெர்மனியையும் பிரிக்கும் 'மகனோட்' எனும் எல்லைக்கோட்டை பிரான்ஸ் ஏற்படுத்தியது. இவ்விரு நாடுகளையும் பிரிக்கும் 'சீக் பிரைட்' எனும் மற்றொரு எல்லைக்கோட்டை ஜெர்மனி ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.