த்ருஷ்டி...

மூடுபனி, புகை மூட்டம், கனமழையின்போது விமானங்கள் தரையில் இறங்கவும்; புறப்படும்போது ஓடுபாதையின் தெரிவு நிலையை அளவிடவும் வடிவமைக்கப்பட்டது 'த்ருஷ்டி' என்னும் கருவி.
த்ருஷ்டி...
Updated on
1 min read

மூடுபனி, புகை மூட்டம், கனமழையின்போது விமானங்கள் தரையில் இறங்கவும்; புறப்படும்போது ஓடுபாதையின் தெரிவு நிலையை அளவிடவும் வடிவமைக்கப்பட்டது 'த்ருஷ்டி' என்னும் கருவி. இது உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. முக்கிய விமான நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள இந்தக் கருவியானது, விமானப் பாதுகாப்பை மேம்படுத்தியுள்ளது. இதைக் கண்டுபிடித்த தேசிய விண்வெளி ஆய்வக விஞ்ஞானியாகப் பணிபுரிந்த முனைவர் சுபாவுக்கு, 'பத்மஸ்ரீ' விருது அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய விண்வெளி ஆய்வகப் பணியில் 1974-ஆம் ஆண்டில் சுபா சேர்ந்தார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல், பொறியியல், சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இவருடைய பணி இருந்தது. ஓய்வு பெற்றும் அவர் பல்வேறு நிறுவனங்களுக்கு ஆலோசனைகளை அளித்து வருகிறார்.

'த்ருஷ்டி' உருவாக்கப்படும் முன்பு இதுபோன்ற கருவிகள் பின்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இவற்றின் விலை அதிகம் என்பதோடு, பராமரிப்பும் கடினமாக இருந்தது. உதிரிபாகங்களையும் இறக்குமதி செய்ய வேண்டி வந்தது.

2010-களின் தொடக்கத்தில் இந்திய வானிலை ஆய்வுத் துறையுடன் இணைந்து தேசிய விண்வெளி ஆய்வகம் இணைந்து 'த்ருஷ்டி'யை உருவாக்கியது. அதிக உணர்வுத் திறனைக் கொண்ட இந்தக் கருவியின் மூலமாக சர்வதேச தர

நிலைகளைப் பின்பற்றி, தரைமட்டத்தில் இருந்து நான்கு மீட்டர் வரை தெரிவுநிலையைக் கணிக்கமுடியும்.

மோசமான தெரிவுநிலை கண்டுபிடிக்கப்பட்டவுடன்,தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க, விமானிகளுக்கு முன்கூட்டியே எச்சரிக்கையும் செய்ய முடிகிறது. இந்த வெற்றியின் பரிசாக பெங்களூரில் தற்போது வசிக்கும் முனைவர் சுபாவுக்கு 'பத்மஸ்ரீ' விருது அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com