'வயது ஒரு வெறும் எண்' என்பதை நிரூபித்திருக்கிறார் தொண்ணுற்று நான்கு வயதாகும் வீராங்கனை பனா தேவி. வயோதிகத்தில் பெரும்பாலானவர்கள் ஓய்வை விரும்புவார்கள். ஆனால், பனாதேவியோ தங்கப் பதக்கங்களை வெல்வதில் மும்முரமாக இருக்கிறார்.
ராஜஸ்தானில் உள்ள பிகானீரைச் சேர்ந்த இவர், சென்னையில் நவம்பர் 5 முதல் 9 வரை நடைபெற்ற 2024 -ஆம் ஆண்டுக்கான 23-ஆவது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், 100 மீட்டர் ஓட்டம் ஆகிய 4 பிரிவுகளில் பதக்கங்களை வென்றுள்ளார்.
பெங்களூரில் நடைபெற்ற 45-ஆவது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் பல தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார்.
இவர் தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். வீட்டு வேலைகளை சுறுசுறுப்பாகச் செய்து வருவதுடன், கால்நடைகளையும் பராமரித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.