மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

வெளிநாடுகளுக்கு செல்லும் பூஜைப் பொருள்கள்...!

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் மட்டுமல்லாது, வெளிநாடுகளுக்கும் இவை அனுப்பிவைக்கப்படுகின்றன.

News image
Updated On :18 ஜனவரி 2026, 4:12 am IST

யாகங்கள், பூஜைகளுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் தயார் செய்து பக்குவப்படுத்தும் பணியை திருக்கோவிலூர்' மடப்பட்டு சாலையில் உள்ள டி.கொளத்தூர் கிராம மக்கள் மேற்கொள்கின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் மட்டுமல்லாது, வெளிநாடுகளுக்கும் இவை அனுப்பிவைக்கப்படுகின்றன.

கிராமத்தின் உள்ளே நுழைந்தால், தெருக்கள், சாலைகள் எங்கும் தர்ப்பைப் புல்லைக் காய வைத்தல், ஹோமத்துக்குத் தேவையான சமித்துகள் காய வைத்தல் என பூஜைப் பொருள்களே காணப்படுகின்றன. இவற்றைக் காய வைத்தல், நறுக்குதல், பாக்கெட் போடுதல் என்று குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஓவ்வோர் வேலைகளைப் பகிர்ந்துகொண்டு செய்கின்றனர்.

இந்தக் கிராமத்தில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னைக்குப் புலம் பெயர்ந்த வைதீகர் ஒருவர், இங்கிருந்து அவ்வப்போது தர்ப்பை, சமித்து ஆகியவற்றை ஊருக்கு வந்து சேகரிப்பார். அதற்கான தேவை சென்னையில் அதிகம் இருக்கவே உள்ளூர் விவசாயிகளை இதற்குப் பயன்படுத்தி உள்ளார். அதன் பிறகு இது தொழிலாக மாறி, இன்று கிராமம் முழுவதும் நடைபெறுகிறது.

அரசு, ஆல், புரசு, நாயுருவி, அத்தி, கருங்காலி, வன்னி , எருக்கு உள்ளிட்ட பல்வேறு சமித்துகளைச் சேகரிப்பதற்காக இந்தக் கிராம மக்கள் வெளியூர்களுக்கும் சென்று தங்கியிருந்து கொண்டு வருகிறார்கள். பெரும்பாலும் இரு சக்கர வாகனங்களில்தான் இவை கொண்டு வரப்படுகின்றன.

தற்போது 'விசுவாமித்ரம்' எனும் தர்ப்பை புல்லை சில விவசாயிகள் பல ஏக்கரில் பயிரிட்டுள்ளனர்.

- மணிசேஷன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.