இணைய தளங்களில் பரபரப்பாக இயங்குவது சினிமா நட்சத்திரங்களின் வாடிக்கையாகி விட்டது. முன்பெல்லாம் ஊடகங்களுக்கு தங்களின் நிலைப்பாட்டை அறிக்கையாக தந்தது போய், இப்போது தங்களது சுட்டுரை, முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் வெளியிடுகிறார்கள். அதுவும் இல்லாமல் இதன் மூலம் தங்களது ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார்கள். யாரை அதிகமாக பின் தொடர்கிறார்கள் என்ற போட்டியும் நடிகர், நடிகைகளுக்குள் நிலவுகிறது. ரசிகர்களின் கவனத்தை கவர்வதற்காக கவர்ச்சி படங்கள் உள்ளிட்ட பல வகையான புகைப்படங்களை வெளியிடுவது, அந்தந்த நேரங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை சொல்லுவது போன்ற செயல்களும் இதில் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் ஐஸ்வர்யாராய் ராஜேஷ் தனது சுட்டுரைப் பக்கத்தில் ரசிகர்களுடன் தொடர்பு கொள்வதை கடந்த சில வாரங்களாக தவிர்த்து வருகிறார். இது பற்றி அவர் ஒரு பேட்டியில் பேசும் போது.. நீண்ட நாள்களாகவே இணைய தள பக்கத்தில் பதிவு செய்வதை தவிர்த்து வருகிறேன். நிகழ்வுகளை அதில் பதிவு செய்யும்போது அதன் மீதே பலரும் கவனம் செலுத்துகின்றனர். நிஜ அனுபவங்களை யாரும் கவனிப்பதில்லை. நிஜ வாழ்க்கையோடு இணைந்திருக்க வேண்டும் என்ற தேவையில் நான் இருக்கிறேன். மேலும் இணைய தள பதிவு என்பது வர்த்தக ரீதியிலாகிவிட்டது. ஒவ்வொருவருக்கும் எண்ணிக்கை முக்கியமாக இருக்கிறது. அதன் மூலம் தங்களை பிரபலப்படுத்திக் கொள்கிறார்கள். பிறகு எப்படி அதிலுள்ள தனித்துவம் தெரியும் என்று தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யாராய்.