ஐந்து பேர் ஐந்து செய்தி

ஐந்து பேர் ஐந்து செய்தி

"ஒருத்தி' படத்தை எடுத்த இயக்குநர் அம்ஷன்குமார், தற்போது "மனுஷங்கடா' படத்தை எடுத்து வருகிறார். இந்தப் படம், இந்திய பனோரமா, கெய்ரோ திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளது.

"ஒருத்தி' படத்தை எடுத்த இயக்குநர் அம்ஷன்குமார், தற்போது "மனுஷங்கடா' படத்தை எடுத்து வருகிறார். இந்தப் படம், இந்திய பனோரமா, கெய்ரோ திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளது.

கவிஞர் மகுடேசுவரன் கவிதைகள் எழுதுவதோடு, தமிழ் இலக்கணம் குறித்த வகுப்புகளை எடுத்து வருகிறார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

முதலில் "எண்கள்' குறித்து முகநூலில் கவிதைகள் எழுதிய பிருந்தா சாரதி, அதைத் தொகுத்து நூலாக வெளியிட்டார். தற்போது, "இருள்' என்ற தலைப்பில் கவிதைகளை எழுதி வருகிறார்.

எழுத்தாளர் சுந்தரராமசாமியின் மகனும், "காலச்சுவடு' பதிப்பாளருமான கண்ணன்-மைதிலி திருமணமாகி 25 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. அதற்கென சிறப்பு விருந்து ஏற்பாடு செய்து நண்பர்களை அழைத்திருக்கிறார்.

கெüதம்வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் "விண்ணைத் தாண்டி வருவாயா-2' திரைப்படத்தில், நான்கு கதாநாயகர்களாம். முதல் பாகத்தில் நடிகர் சிம்பு நடித்த கதாபாத்திரத்தில் தற்போது மாதவன் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com