ஐந்து பேர் ஐந்து செய்தி 

ஐந்து பேர் ஐந்து செய்தி 

நகைச்சுவை நடிகர் வடிவேலு தற்போது தாத்தாவாகியுள்ளார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேரக் குழந்தையைக் கொஞ்சி மகிழ்கிறார்.

* மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தன் நண்பர்களுக்கும், பிற எழுத்தாளர்களுக்கும் எழுதிய கடிதங்கள் முழுவதுமாகத் தொகுக்கப்பட்டு, 800 பக்க தொகுப்பாக வெளியாகியுள்ளது.

* நடிகர் கவுண்டமணி தினமும் மாலை நேரங்களில் நண்பர்களை தனது அலுவலகத்துக்கு அழைத்துப் பேசுகிறார். ஆனால் அவற்றை நேர்காணல்களாக வடிவம் கொள்ள அனுமதிப்பதில்லை.

* கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான ரவி சுப்பிரமணியமும், மொழிபெயர்ப்பாளர்எஸ்.சண்முகமும் 2018}ஆம் ஆண்டுக்கான மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகளைப் பெறுகிறார்கள்.

* நகைச்சுவை நடிகர் வடிவேலு தற்போது தாத்தாவாகியுள்ளார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேரக் குழந்தையைக் கொஞ்சி மகிழ்கிறார்.

* நடிகர் ரஜினிகாந்தை வைத்து அடுத்தப் படத்தை இயக்கப் போகும் கார்த்திக் சுப்புராஜ், அந்தப் படத்தில் நடிக்குமாறு தன் நண்பரும் நடிகருமான விஜய் சேதுபதியைக் கேட்டுள்ளார். அவரும் உடனே ஒப்புதல் அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com