23 ஆண்டுகளுக்குப் பின்...
சீமான் இயக்கத்தில் 1996-ஆம் ஆண்டு வெளிவந்த படம் "பாஞ்சாலங்குறிச்சி'. இந்தப் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த பிரபு - மதுபாலா ஜோடி, 23 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடியாக நடிக்கவுள்ளனர். படத்துக்கு "காலேஜ் குமார்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ராகுல் விஜய், பிரியா வட்லாமணி, நாசர், மனோபாலா, சாம்ஸ் நடிக்கின்றனர். காடி கி.கிருபா இசையமைக்கிறார். திரைக்கதை, வசனம் எழுதுகிறார் ஆர்.கே.வித்யாதரன். கதை எழுதி இயக்குகிறார் : ஹரி சந்தோஷ். இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. இதில் பிரபு, மதுபாலா, சாம்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது பிரபு, மதுபாலா இருவரும் "பாஞ்சாலங்குறிச்சி' படப்பிடிப்பின் போது நடந்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்து பேசினர்.
பிரபு பேசும் போது... "நான் சங்கிலி படத்தில் அறிமுகமாகி, 37 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. "காலேஜ் குமார்' படம், எனது 225வது படம். பெற்றோர்கள் இந்தத் தலைமுறையினரை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள்? பெற்றோர்களை மாணவ, மாணவிகள் எந்த கண்ணோட்டத்தில் நடத்துகிறார்கள் என்று காமெடியுடன் சொல்ல வருகிறது படம்'' என்று பேசினார்.