வடக்கு கொல்கத்தாவின் முத்தாரம் பாபு தெருவில் அமைந்துள்ளது சலவைக்கல் மாளிகை.
இதனுள் பளிங்கு சுவர்கள், பளிங்கு தரைகள், மேற்கத்திய நுணுக்கமான சிற்பங்கள். ஒவியங்கள் இந்தியர்களின் சிற்பங்கள், ஒவியங்கள் விக்டோரியா ராணி காலத்து மரச்சாமான்கள், துண்டுகள் எனப் பல உண்டு.
கூடுதலாக இதன் நடைகூடத்தில் கம்பீரமான பெரிய சரவிளக்கு கடிகாரங்கள், சிலைகள் என பலவற்றை ரசிக்கலாம். அருகிலேயே விலங்கியல் பூங்கா உள்ளது.
இது தான் இந்தியாவின் முதல் விலங்கியல் பூங்கா என்பது மற்றொரு சிறப்பு. இங்கு நாரைகள், கொக்குகள், பழம் தின்னி பறவைகள், மயில்கள் என பார்க்க ஏராளம் உண்டு. ஆனால் இந்த மாளிகையையும், விலங்கியல் பூங்காவையும் பார்க்க மேற்கு வங்காள அரசு சுற்றுலா கழகத்திடம் முன் அனுமதி பெற வேண்டும்!