தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு

"பரியேறும் பெருமாள்' படத்துக்குப் பின் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்து வரும் படம் "இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு'
தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு

"பரியேறும் பெருமாள்' படத்துக்குப் பின் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்து வரும் படம் "இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' அட்டக்கத்தி தினேஷ், ஆனந்தி, ரித்விகா, ராம்தாஸ், லிங்கேஷ், ஜான்விஜய், ஜானிஹரி, வினோத் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பா.ரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை கதை எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தின் படப்பிடிப்பு சென்னை,மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.  கிஷோர் ஒளிப்பதிவு செய்கிறார்.  சண்டைக் காட்சிகளை பயிற்சியாளர் சாம், மற்றும் இயக்குநர் அதியன் ஆதிரை இருவரும் சென்னை புற நகர் தேசிய நெடுஞ்சாலையில் இரவில் எடுத்து  வருகிறார்கள்.  தினேஷ் வேகமாகசு செல்லும் லாரியில் தொங்கிக்கொண்டு சண்டைபோடும் காட்சிகளை படமாக்கிக்கொண்டிருந்தனர். ஒளிப்பதிவு கேமிராக்கள் லாரிக்குள் இயங்கிதால், சாலையில் செல்வோருக்கு நிஜமாக ஏதோ லாரியில் நடக்கிறது என்பது போன்ற தோற்றத்தைக் கொடுத்திருக்கிறது. அதன் பின்னர் அங்கு நடப்பது படப்பிடிப்பு என்று அறிந்த பின்னர் இயல்பு நிலை திரும்பியிருக்கிறது. 

இதனால் சாலையில் சற்று நேரம் பரபரப்பு இருந்தது. படப்பிடிப்பைப் பார்த்த பொதுமக்கள் சிலர், எதார்த்தமாக நம்பும் அளவுக்கு இருந்தது என்று படக்குழுவினரைப்  பாராட்டியுள்ளனர். கடைசிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com