தென்கச்சி கோ. சுவாமிநாதன் பள்ளிக் கூடத்தில் படிக்கும் போதே கதை எழுதுவதும், பத்திரிகைக்கு அனுப்புவதும், அனுப்பிய வேகத்தில் பள்ளியின் முகவரிக்கே திரும்பி வந்து கொண்டிருந்தது. "இந்த வயதிலேயே கதை எழுத ஆரம்பிச்சிட்டியா! நீ உருப்படவே மாட்டே!' என்று காதை பிடித்து திருகினார் ஆசிரியர்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு அதே ஆசிரியர் தன் மாணவன்தான் என்று தெரியாமலேயே "தினம் ஒரு தகவல்' தரும் சுவாமிநாதன் பேச்சை காது கொடுத்து கேட்கிறேன். சிறப்பாக தகவல் சொல்லிக் கொண்டிருக்கிறார், என்று வானொலிக்கு நேயர் கடிதம் எழுதினாராம்!