நடிகை இலியானா வெளிநாட்டு நண்பர் ஒருவரை கடந்த 2 வருடமாக காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ளவும் திட்டமிட்டிருந்தனர். திடீரென்று அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
காதலனை விட்டு விலகினார் இலியானா. சோகத்தின் பிடியில் இருந்தவர் ஒரு கட்டத்தில் மனநல சிகிச்சை பெற்றார். அதன்பிறகு உற்சாகம் அடைந்தார். இப்போது சினிமாக்களில் நடிப்பதில் திவீரம் காட்டி வருகிறார்.
எனது நிலையை பார்த்தவர்கள் என்னை மனநல சிகிச்சை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தினர். "உன் மீது மற்றவர்கள் கூறும் புகார்கள் உண்மையென்றால் ஏற்றுக்கொள், அப்போதுதான் பிரச்னையிலிருந்து நீ வெளியில் வந்து உன்னை நீயே அறிய முடியும்' என்றார் மருத்துவர்.
அவர் சொன்னது உண்மை. என் மீதான குற்றச்சாட்டுக்களை நான் ஏற்றுக்கொண்ட பிறகு எனக்குள் இருந்து என்னையே நான் கண்டுபிடித்தேன். ஒரு காதலன் இருப்பது அமைதியையும் பாதுகாப்பு உணர்வையும் தருகிறது. ஆனால், அதைவிட நமது மனநிலை மிக முக்கியம். நான் மீண்டும் காதலுக்கு தயாரில்லை என மனம் திறந்துள்ளார் இலியானா.