1944-ஆம் ஆண்டு பாரதிதாசன் தன் மூத்தமகள் சரஸ்வதியின் திருமண அழைப்பிதழுடன் தங்களுக்கு ஒய்வு இருக்கிறது என்று திருமணத்திற்கு வந்துவிட வேண்டாம் என்று குறிப்பிட்டு ஒரு கடிதத்தையும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு அனுப்பினாராம். திருமணம் நடைபெறுவது சிறிய ஊரில் என்.எஸ்.கேக்கு படப்பிடிப்பு இல்லாமல் இருந்தால் திருமண விழாவிற்கு வந்து விடுவார். பெரும் கூட்டம் கூடிவிடும். சமாளிக்க இயலாது அதனால் அப்படி எழுதினேன் என்றாராம் பாவேந்தர்.
(டாக்டர் நல்லிகுப்பு சாமி செட்டியாரின் சில சிந்தனைகள், சில நினைவுகள் நூலிலிருந்து)
-கோட்டை செல்வம்