1966-ஆம் ஆண்டு ஐ.நா. அவையில் எம்.எஸ். சுப்புலெட்சுமி சங்கீதக் கச்சேரி நிகழ்த்தினார். அதற்காக நியூயார்க்கில் உறவினர் ஒருவர் வீட்டில் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் தச்சு வேலை நடந்து கொண்டிருந்தது.
அதனால் சத்தம் அதிகமாக இருந்தது. ஆனால் அதில் கவனம் கலையாமல் எம்.எஸ் மெய் மறந்து பாடிக் கொண்டிருந்தார்.
திடீரென்று தச்சு வேலை சத்தம் நின்றது. சில வேலையாட்கள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த இடத்துக்கு வந்து எங்களுக்கு என்னவோ இந்த இசை புரியவில்லைதான். ஆனால் இது எங்கள் உள்ளத்தை உருக்குகிறது. நாங்களும் இதைக் கேட்கலாமா? என்று பணிவோடு கேட்டார்கள்.
-நெ.ராமன், சென்னை