வேண்டாமே இந்த வரவேற்பு

முத்துராமலிங்கதேவர் 1930-இல் பர்மாவிற்கு சென்றார். பர்மா ஜனாதிபதி அளித்த வரவேற்பு ஏற்பாட்டில் ஒரு முக்கிய அம்சம் இருந்தது. ஒரு வித்தியாசமான விசித்திரமான வரவேற்பு முறை. 
வேண்டாமே இந்த வரவேற்பு

முத்துராமலிங்கதேவர் 1930-இல் பர்மாவிற்கு சென்றார். பர்மா ஜனாதிபதி அளித்த வரவேற்பு ஏற்பாட்டில் ஒரு முக்கிய அம்சம் இருந்தது. ஒரு வித்தியாசமான விசித்திரமான வரவேற்பு முறை.
 அது பர்மியப் பெண்கள் இருபுறமும் வரிசையாக தரையில் அமர்ந்து தங்கள் கூந்தலைத் தரையில் படிந்திருக்கும் படி விரித்து வைப்பார்கள். முக்கிய விருந்தினர் அந்த கூந்தலை மிதித்தபடி நடந்து செல்வார். இத்தகைய வரவேற்புக்காக அழைத்து வரப்பட்ட தேவர். கூந்தல் தரையில் பட வரிசையாக அமர்ந்திருந்த பெண்களைப் பார்த்தார்.
 இது குறித்து விவரம் கேட்டறிந்தார். உடனே அத்தகைய வரவேற்பு ஏற்பாட்டில் கலந்து கொள்ள மறுத்ததோடு அந்த வரவேற்பு முறையை நீக்கும்படி ஜனாதிபதியைக் கேட்டு கொண்டார். அன்றோடு அந்த வரவேற்பு முறையை ஒழித்தும் விட்டார்.
 -பரத், சிதம்பரம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com