அறிமுக நாயகன் நிஷாந்த் நடித்துள்ள படம் "பன்றிக்கு நன்றி சொல்லி'. இப்படத்தை டார்க் காமெடியாக இயக்கியுள்ளார் பாலா அரன்.
புதையல் வேட்டையை மையமாகக் கொண்ட கதை. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சிலையைத் தேடிச் செல்லும் பயணம். பலர் இந்த சிலையைத் தேடிக் கொண்டிருக்க, அது குறித்த ஒரு முக்கிய குறிப்பு நாயகனை வந்தடைகிறது. இதை தெரிந்து கொண்ட இருவர் நாயகனைத் துரத்த, சுவாரஸ்யமான திருப்பங்களுக்குப் பின்னர் சிலையை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதே திரைக்கதை. படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது படம்.