"என்னமோ ஏதோ', "கரையோரம்", "நாரதன்", "7 நாட்கள்", "பாஸ்கர் ஒரு ராஸ்கல்" படங்களில் கவர்ச்சி நடிப்பில் ஈர்த்தவர் நிகிஷா படேல். தமிழில் பெரிய வாய்ப்பு இல்லாத நிலையில் கடந்த ஆண்டு கஸ்தூரிராஜா இயக்கத்தில் "பாண்டிமுனி' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் இயக்குநருடன், நிகிஷா பங்கேற்றார்.
ஆனால் திடீரென்று அப்படத்திலிருந்து நிகிஷா நீக்கப்பட்டார். இயக்குநர் கஸ்தூரிராஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அப்படத்திலிருந்து நிகிஷா நிராகரிக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. புதிய படம் எதுவும் இல்லாமல் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் நிகிஷா, இணையத்தில் அதற்கான வலை வீசி வருகிறார். மும்பை வீட்டில் பொழுதை கழித்துக்கொண்டிருந்த நிகிஷா திடீரென்று துருக்கி பறந்தார். கடற்கரை பகுதியிலும், நீச்சல் குளத்திலும் சிவப்பு நிற நீச்சல் உடையில் நீந்தி மகிழ்ந்ததுடன் அப்படங்களை இன்ஸ்டாவிலும் பகிர்ந்து "என்னைப் பார் என் அழகைப்பார்' என்று கமெண்ட் பகிர்ந்திருக்கிறார். அதற்கு ஏகத்துக்கு ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். சினிமாவில் உங்களை மீண்டும் எப்போது பார்ப்பது என்று பலர் கேட்டிருக்கின்றனர்.