"மேயாத மான்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், பிரியா பவானி சங்கர். தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யாவுடன் "மான்ஸ்டர்' என்ற படத்தில் நடித்த அவர் கடைசியாக அருண் விஜய்யுடன் "மாபியா' என்ற படத்தில் நடித்தார். தற்போது , கமல்ஹாசனுடன் "இந்தியன்-2' படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போதைய பட உலகில் கவர்ச்சியாக நடித்தால்தான் முன்னணி கதாநாயகியாக உயரமுடியும் என்று பேசப்படும் நிலையில், இது குறித்து பேசிய, பிரியா பவானி சங்கர், ""என் முகத்துக்கும், உடற்கட்டுக்கும் கவர்ச்சி வேடங்கள் பொருந்தாது. அதனால் ஒருபோதும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். கவர்ச்சியான கதாபாத்திரங்களைக் கொண்ட சில புதிய பட வாய்ப்புகள் எனக்கு வந்தன. நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்'' என தெரிவித்துள்ளார்.