மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசிப்பவர், ஜோ மொரானி. ஹிந்தி நடிகையான இவரும், இவரது சகோதரி ஷாஜா, தந்தையும், திரைப்படத் தயாரிப்பாளருமான கரீப் மொரானி ஆகியோர், கரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
கடந்த மாதம், மூவரும் குணமடைந்து, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர். கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு, "பிளாஸ்மா தெரபி' சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுக்குப் பயன்படும் வகையில், ஜோ மொரானி, ரத்த பிளாஸ்மாவை, தானமாக வழங்கினார்.