படப்பிடிப்புக்கு அஜித் தடை

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துக்கொண்டிருக்கும் "வலிமை' படத்தின் படப்பிடிப்பு கரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
படப்பிடிப்புக்கு அஜித் தடை

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துக்கொண்டிருக்கும் "வலிமை' படத்தின் படப்பிடிப்பு கரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திரைத்துறைக்குப் பிந்தைய பணிகளுக்கு அரசு தரப்பில் அனுமதி கொடுக்கப்பட்டு டப்பிங், எடிட்டிங் ,கிராபிக்ஸ் உள்ளிட்ட பணிகள் தொடங்கி இருக்கக்கூடிய சூழ்நிலையில் விரைவில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "வலிமை' படத்தின் படப்பிடிப்பு இன்னும் 72 நாட்கள் மீதமிருக்கும் சூழ்நிலையில் படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்த உடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டால் தான் திட்டமிட்டபடி தீபாவளிஅல்லது 2021 பொங்கல் அன்று திரைக்கு வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி இருக்கக் கூடிய சூழ்நிலையில் படக்குழு படப்பிடிப்பு தொடங்க அனுமதி எப்போது கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நடிகர் அஜித் தரப்பிலோ படப்பிடிப்பை பொறுமையாகத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளி வந்திருக்கிறது. குறிப்பாக சென்னையில் கரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருவதால் "வலிமை' படத்தின் படப்பிடிப்பை பொறுமையாகவே தொடங்கிக் கொள்ளலாம் என்று அஜித் கூறியிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com