""நான் இந்தப் புத்தகத்தை 2-ஆம் வகுப்பில் படிக்கும் ஒரு குழந்தைக்குச் சமர்ப்பிக்கிறேன். அந்தச் சிறுமியின் பெயர் சிநேகல் தாக்கர். 2002 -ஆம் ஆண்டு ஏப்ரல் 11-ஆம் நாள் மாலை நேரத்தில் சாலை வழியாக நான் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆனந்த் என்ற நகரை அடைந்தபோது வகுப்பு மோதல்கள் காரணமாக அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அடுத்தநாள் ஆனந்தாலயா உயர் நிலைப் பள்ளியில் மாணவ மாணவரிடம் நான் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு கேள்வி வந்தது.
"நமது பகைவன் யார்?' இதுதான் அந்தக் கேள்வி. பல பதில்களைச் சொன்னார்கள்.
ஆனால் நாங்கள் அனைவரும் ஏற்றுக் கொண்ட சரியானபதில், சிநேகாவிடமிருந்து வந்தது. வறுமைதான் நமது பகைவன் என்பது அந்தச் சிறுமியின் பதில்.
நமது அனைத்தும் பிரச்னைகளின் ஆணிவேர் அதுதான். நாம் போராட வேண்டியது வறுமைக்கு எதிராகத்தான். நமக்குள்ளே அல்ல.ஆதாரம் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் எழுதிய "எழுச்சி தீபங்கள்' நூலின் சமர்ப்பணம் பக்கத்தில் எழுதப்பட்ட வாசகங்கள்.