கரோனா பரவல் அச்சங்களுக்கு இடையே வெற்றி முகம் கண்டுள்ளது "சுல்தான்'. அரங்குங்கள் நிறைந்த காட்சிகளாக பல திரையரங்களில் விழா கோலம் பூண்டுள்ளது இந்தப் படம். இந்தப் படத்தின் வெற்றி குறித்து நடிகர் கார்த்தி பேசும் போது.... ""படம் பெரும் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. இப்படத்தின் கதையை கேட்கும்போது நான் 10 வயது சிறுவனாக உணர்ந்தேன். நான் என்ன சொன்னாலும் கேட்பதற்கு 8 அடியில் ஒரு கதாபாத்திரம். அதேபோல், குள்ளமாக ஒரு பாதுகாவலர். இதுபோக, 100 அடியாள்கள். என்னை பாதுகாப்பது தான் அவர்களின் வேலை. எப்போதும் என்னைச் சுற்றியே இருப்பார்கள் என்று கேட்கும்போது கற்பனைக் கதை போல தோன்றியது. அனைவரும் அதை விரும்புவோம்.
இயக்குநர் பாக்கியராஜ் கண்ணனின் முதல் வேண்டுகோள். இந்தப் படத்தில் லால் நடிக்க வேண்டும் என்பதுதான்.
அவர் கூறியதைப் போல லால் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். மயில்சாமியின் நகைச்சுவையை நான் மிமிக்ரி செய்ய முயற்சி செய்யும் அளவிற்கு அளப்பரியதாக இருக்கும். அதேபோல, யாருக்கு என்ன தேவையோ அதை கடன் வாங்கியாவது செய்யக் கூடியவர் மயில்சாமி. பாடல்களிலும் கதையைக் கூறி யாரையும் எழுந்து போக விடாமல் இசையமைத்த இசையமைப்பாளர்களுக்கு நன்றி. இப்படத்தின் ஒவ்வொரு பாத்திரங்களும் ஒரு ஓவியம். அதை வடிவமைத்த பெருமை இயக்குநர் பாக்கியராஜ் கண்ணனையே சேரும்''என்றார்.