அதிகம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதால், மூளையில் பதிய வைக்கும் திறன் குறைந்து, நாளடைவில் படிப்படியாக முக்கியமானவர்கள் தொடர்பு எண் முதற்கொண்டு வீட்டு முகவரி வரை அனைத்தையும் மறக்கும் நிலை ஏற்படுகிறது. இதையே நாம் டிஜிட்டல் அம்னீசியா என்கிறோம்.
ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும் சிறுவர்கள் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் அதிர்ச்சிகரமான விளைவுகள் கண்டறியப்பட்டது. அதன்படி, இரவு நேரத்தில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் சிறுவர்களுக்கு தூக்கமின்மை, மனநல பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவதும், இதன் விளைவாக உளவியல் கோளாறு மன அழுத்தம் உண்டாவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே, இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க ஸ்மார்ட் போன்களின்
உபயோகத்தை குறைப்பது நல்லது.