"திருட்டு ரயில்', "கடலில் கட்டுமரம்' ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ரக்ஷன். அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த இவர், அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்.
ரக்ஷன் அடுத்து ஆரூர் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இவர் வெற்றிமாறன், செல்வராகவன், கேஎஸ்.ரவிகுமார், எஸ்.ஜே.சூர்யா என முன்னணி இயக்குநர்களிடம் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராக பல வெற்றி படங்களில் பணிபுரிந்தவர்.
தமிழ்நாட்டில் நடந்த மிக பெரிய ஊழலை மையமாக கொண்டு இந்த கதையை ஆரூர் மாரிமுத்து உருவாக்கி இருக்கிறார். இந்த படத்துக்காக ரக்ஷன் தனது தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி வித்தியாசமாக நடிக்க உள்ளார். மிக பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். அனிருத் இசையமைக்க நாயகியாக நடிக்க முன்னணி நடிகையிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.