ரத்தத்தின் ரத்தமே... - 7

நாம் வெறுங்கண்ணால் பார்க்கும்போது ரத்தமானது சிவப்பு நிறத்தில் அல்லது கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் ஒரு திரவமாகத் தெரியும்.
ரத்தத்தின் ரத்தமே... - 7

நாம் வெறுங்கண்ணால் பார்க்கும்போது ரத்தமானது சிவப்பு நிறத்தில் அல்லது கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் ஒரு திரவமாகத் தெரியும். அவ்வளவுதான். ஆனால், அந்த சிவப்பு நிற திரவத்திற்குள் எவ்வளவு பொருள்கள் இருக்கின்றன தெரியுமா?

நம் வீட்டில் செய்யப்படும் பால் பாயாசம் இருக்கிறதே அதை ரத்தத்திற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். பால் பாயாசத்தில் பாலின் அளவு அதிகமாக இருக்கும். அதேபோல ரத்தத்தில் "பிளாஸ்மா' எனப்படும் திரவத்தின் அளவு அதிகமாக இருக்கும். பால் பாயாசத்தில் சேமியா, ஜவ்வரிசி, முந்திரி, திராட்சை இவைகளெல்லாம் இருப்பதுபோல, ரத்தத்தில் சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள் பிளேட்லெட்டுகள் இவை மூன்றும் "பிளாஸ்மா' எனப்படும் திரவத்தில் இருக்கின்றன.

ரத்தத்தில் சிவப்பணுக்கள் தான் மற்ற எல்லா செல்களையும்விட மிக அதிகமாக இருக்கும். சொல்லப்போனால், மொத்த ரத்தத்தில் கிட்டத்தட்ட பாதி அளவு சிவப்பணுக்கள் தான் அதிகமாக இருக்கும். வயது வந்த  ஆணின் உடம்பில், சுமார் 2.4 மில்லியன் (24 லட்சம்) சிவப்பணுக்கள் ஒரு நொடியில் உற்பத்தி ஆகின்றன. எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகி, ரத்த ஓட்டத்தில் கலந்துவிடும் இந்த சிவப்பணுக்கள்,  சுமார் 4 மாதங்கள் (அதாவது 120 நாள்கள்) நமது உடம்பு முழுவதுமாக சுற்றி வருகிறது. உடலை ஒரு முறை முழுக்க சுற்றிவர ஒரு நிமிடம் ஆகிறது. அப்படியானால், தலையிலிருந்து கால் வரை உடலின் அத்தனை பாகங்களுக்கும் சென்று வர சுமார் 1 நிமிடம் ஆகிறது. இந்த சிவப்பணுக்கள்தான், ஹீமோகுளோபின் என்னும் இரும்புச்சத்துப் பொருளை உடலெங்கும் சுமந்து கொண்டு செல்கிறது.

ஹீமோகுளோபின் தான் உடலுக்குத் தேவையான சுத்தமான ஆக்ஸிஜனை சுமந்து, உடலின் எல்லாப் பாகத்துக்கும் கொண்டு சென்று சேர்க்கிறது. 120 நாள்கள் கடினமான வேலைப் பார்த்து, நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கும் இந்த சிவப்பணுக்கள், 120 நாள்கள் முடிந்தவுடன் இறந்து விடுகின்றன. சிவப்பணுக்களின் ஆயுள்காலம் சுமார் நான்கு மாதங்கள்தான். இறந்துபோன சிவப்பணுக்கள் செய்த வேலையைப் புதிதாக உற்பத்தியாகும் சிவப்பணுக்கள் எடுத்துக்கொண்டு, மறுபடியும் நம்மை தொடர்ந்து உயிர் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. சிவப்பணுக்களைப் போல மிக அதிக அளவில் இல்லாவிட்டாலும், மிகக் குறைவான அளவில் வெள்ளை அணுக்கள் பிளேட்லெட்டுகள் ரத்தத்தில் இருக்கின்றன.

நமது உடலில் ரத்தத்திலுள்ள மற்ற செல்களைப் போல, சிவப்பணுக்களுக்கு என்று கருப்பொருள் இல்லை. இதனால் இடம் அதிகமாகக் கிடைப்பதால், ஒவ்வொரு சிவப்பணுக்களும் நிறைய ஆக்ஸிஜனை சுமந்து,  உடம்பு முழுவதும் கொண்டு சேர்க்கிறது.

விலங்கினத்தைப் பொருத்தவரை, எவ்வளவு பெரிதாக ஒரு விலங்கு இருக்கிறதோ,  அதற்கு மிகவும் மெதுவாகத்தான் இருதயத் துடிப்பு இருக்கும். ஒரு மனிதன் ஓய்வாக இருக்கும்போது,  அவனுடைய இருதயத் துடிப்பு சுமார் 70 லிருந்து 75 வரை இருக்கும். இது மிகச் சரியான இருதயத் துடிப்பு ஆகும். இதே அளவில் தான்,  ஓர் ஆட்டினுடைய இருதயத் துடிப்பும் இருக்கும். அதே நேரத்தில் மிகப்பெரிய உடலமைப்பையும் மிகப் பெரிய எடையும் கொண்ட ஒரு நீலத் திமிங்கலத்தின் இருதயம் ஒரு நிமிடத்துக்கு சுமார் 5 முறைதான் துடிக்குமாம். 

இருதயத்துக்கு ஆக்ஸிஜன் சரிவரக் கிடைத்துக் கொண்டிருந்தால், இருதயத்தைத் தனியாக வைத்திருந்தால் கூட,  இருதயத் துடிப்பு சரியாக இருக்கும். பழங்கால எகிப்தியர்கள் அன்பு, பாசம், ஆசை, காதல், உணர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவற்றிற்கு அடிமைப்பட்டவர்கள். அதாவது அவர்கள் மூளையை அதிகம் நம்பமாட்டார்கள். இருதயத்தைத் தான் அதிகமாக நம்புவார்கள். அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இறந்துவிட்டால், இறந்தவருடைய உடலை பதம் பண்ணி வைக்கும்போது, இறந்தவருடைய மூக்குத் துவாரம் வழியாக மூளையை எடுத்து வெளியே போட்டுவிடுவார்களாம். ஆனால் இருதயத்தை மட்டும் மிக மிகப் பத்திரமாகப் பாதுகாத்து வைப்பார்கள்.

இருதயத்திலிருந்து ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தத்தை, இருதயத்தை ஒட்டியுள்ள மிகப்பெரிய ரத்தக்குழாய்கள் எடுத்துச் செல்லும். இந்த ரத்தக்குழாய்கள், அவரவர் மோதிர விரல் அளவுக்கு தடிமனாக இருக்கும். பின் இந்தப் பெரிய ரத்தக்குழாய்களிலிருந்து சற்று சிறிய ரத்தக்குழாய், மிகச் சிறிய ரத்தக்குழாய், கடைசியில்  மிக மிகச்சிறிய ரத்தக் குழாய்களுக்கு (தந்துகிகள்) கொண்டு போய் விடுகின்றன.

ரத்தத் தந்துகிகளை நாம் வெறுங்கண்ணால் பார்க்க முடியாது. மைக்ரோஸ்கோப் மூலம் தான் பார்க்க முடியும். ஒரு முடியை விட மெல்லியது இந்த தந்துகிகள் என்று அழைக்கப்படும் மிகமிகச் சிறிய ரத்தக்குழாய்கள். ஒரு வெள்ளை பேப்பரில் ஒரு சிறிய புள்ளி வைக்கிறோம் என்றால், அந்தப் புள்ளி நமது கண்ணுக்குத் தெரியும். ஆனால் இந்த ரத்தத் தந்துகிகள் ஒரு புள்ளியை விட மிகச் சிறியது. மிகச் சிறிய ரத்தக்குழாயின் தடிமன் 5 மைக்ரோ மீட்டர். ஆனால் ஒரு மயிரிழையின் தடிமன் சுமார் 17 மைக்ரோ மீட்டர் ஆகும். ஆக, உடலிலேயே மிகச்சிறிய ரத்தக்குழாய்கள், நமது தலைமுடியின் தடிமனை விட 3 -இல்    1 மடங்கு சிறியது. அதனால் தான் கண்ணுக்குச் தெரிவதில்லை. மனித உடலில் சுமார் 10 மில்லியன் (1000 கோடி) மிக மிகச் சிறிய ரத்தக் குழாய்கள் இருக்கலாம்.

ஒருவரின் உடலிலுள்ள மொத்த ரத்தக்குழாய்களையும் (பெரிய ரத்தக் குழாய், சிறிய ரத்தக் குழாய்,  மிக மிகச் சிறிய ரத்தக் குழாய்,  தந்துகிகள் என்று அழைக்கக் கூடிய கண்ணுக்குத் தெரியாத ரத்தக் குழாய்) இவைகள் அனைத்தையும், வெளியே எடுத்துப் போட்டு, ஒன்றோடொன்று நீளவாக்கில் சேர்த்து முடிச்சு போட்டுக் கொண்டே போனால்,  சுமார் 1 லட்சம் கிலோ மீட்டர் நீளம் இருக்கும். இதில் இஹல்ண்ப்ப்ஹழ்ண்ங்ள் என்று சொல்லக்கூடிய ரத்தத் தந்துகிகள் தான் சுமார் 80 சதவீதம் நீளம் இருக்கின்றன. ரத்தக் குழாய்கள் மிகச் சிறியதாகவும்,  பெரியதாகவும்,  மெல்லியதாகவும்,  தடிமனாகவும் நிறைய இருக்கலாம். ஆனால் உடம்பு முழுவதையும் ஆக்கிரமித்து விடுகிறது.

ஆணின் உடலில் இடைவிடாமல்,  தொடர்ந்து மணிக்கு 3 முதல் 4 மைல் வேகத்திற்கு ரத்தம் ஓடிக்கொண்டே இருக்கும். இது நாம் சாதாரணமாக நடக்கும்போது ஏற்படும் வேகம் தான். ஒரு மருந்தை ஒருவர் கையில் ஊசி ழூலம் போட்டுக் கொண்டால்,  சில நொடிகளில் அந்த மருந்து அவருடைய மூளைக்குப் போய் சேர்ந்துவிடுகிறது.

நமது உடலில் ரத்த ஓட்டம் சீராகவும், சரியாகவும் ஓடுவதற்கு வைட்டமின் டி மிகப் பெரிய அளவில் உதவும். இந்த வைட்டமின் டி  யானது,  ரத்தக் குழாய்களின் சுவர்களிலுள்ள செல்களை ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் வைத்திருக்க உதவுகிறது. ஒருவருக்கு ரத்த ஓட்டம் சரியாக இல்லை, மிகக் குறைவாகவே ரத்தம் பாய்கிறது என்றால், அந்த இடங்களுக்கு ரத்த ஓட்டம் போதுமான அளவு இல்லை என்று பொருள். இதனால், பெரிய தசைகள் அடிக்கடி இழுத்துப் பிடித்துக் கொள்வது, கால்களில் பாதங்களில் லேசான வீக்கம், எப்பொழுதும் தொட்டுப் பார்த்தால் ஜில்லென்று இருக்கும் பாதங்கள், நீண்ட நாள்கள் ஆறாத புண்கள், ஓய்வாக இருக்கும்போதும் கால், பாதங்களில் தொடர்ந்து வலி இவைகளில் சில அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், உங்கள் அருகிலுள்ள ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை நிபுணரை சந்திக்கவும்.

நமது உடலிலேயே மிகப் பெரிய ரத்தக் குழாய், இருதயத்தை ஒட்டி, இருதயத்திலிருந்து வெளிவரும் (Aorta)  என்கிற ரத்தக்குழாய்தான். ரத்த அழுத்தம் ஒருவருக்கு அதிகமாக இருந்தால் 

1)எடையைக் குறையுங்கள்

2)தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்

3)ஆரோக்கியமான சைவ உணவுகளை அதிகமாகச் சாப்பிடுங்கள் 

4)உங்களது உணவில் உப்பை பாதிக் குறையுங்கள்

5)சிகரெட் பிடிப்பதை இன்றோடு நிறுத்துங்கள்

6)காபி அடிக்கடி நிறையக் குடிக்காதீர்கள் 

7)மன அழுத்தத்தைக் குறையுங்கள்.

உடல் முழுவதும் ரத்தம் நல்ல முறையில் ஓடிக் கொண்டிருக்க வேண்டுமென்றால், இரண்டு கப் வெந்நீரை குடியுங்கள். வெந்நீரைக் குடித்து வந்தால், உங்களது உடல் தானாகவே குளிர்ச்சியடைந்து, உடல் முழுவதும் ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்.

இருதயத்தை ஒட்டியிருக்கும் மிகப் பெரிய ரத்தக் குழாய் (அர்ழ்ற்ஹ) முதல் கால் கட்டை விரலில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத மிகச் சிறிய ரத்தக்குழாய் வரை, ரத்தம் நல்லது, கெட்டது என்று எல்லாவற்றையும் சுமந்து கொண்டு செல்கிறது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com