காந்திஜி 1948இல் கொலை செய்யப்பட்டபோது, அவரது பிள்ளைகள் ராம்தாஸ், மணிதாஸ் ஆகிய இருவரும் இந்திய கவர்னர் ஜெனரல் ராஜாஜிக்கு எழுதிய கடிதத்தில், "கோட்ஸே மன்னிக்கப்பட வேண்டும். அதுவே காந்திய வழியாகும்' என்று எழுதினார்கள். ஆனால் அந்த மனு ராஜாஜியால் நிராகரிப்பட்டது.
என்றாலும், 1.5.1949அன்று கோட்ஸேவுக்கு ராம்தாஸ் எழுதிய கடிதத்தில், காந்தி வாரிசு என்ற முறையில் கோட்ஸேவை மன்னித்துவிட்டதாகத் தெரிவித்தார். கோட்ஸேவை சந்திக்க ராம்தாஸ் அனுமதி கோரியபோது, மறுக்கப்பட்டது. சிம்லா சிறையிலிருந்த கோட்ஸேவும் நன்றி தெரிவித்து, ராம்தாஸூக்கு பதில் கடிதம் எழுதினார்.