கற்ற பாடம்..!

ஏமாற்றங்களைப் பேச்சாளர்கள், தங்களது கட்சித் தொண்டர்களுக்குத் தருவது கூடாது.
கற்ற பாடம்..!


ஏமாற்றங்களைப் பேச்சாளர்கள், தங்களது கட்சித் தொண்டர்களுக்குத் தருவது கூடாது. தவிர்க்க முடியாத, எதிர்பாராத நியாயமான காரணங்கள் இருந்தாலன்றி, ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்வது கூடாது.

இதுகுறித்து "பேசும் கலை வளர்ப்போம்' எனும் நூலில் மு.கருணாநிதி எழுதியிருந்தது:

""என் தந்தை இறந்து  எரியூட்டல் நிகழ்ச்சி நடைபெற்ற அன்று மாலை, தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவாஞ்சியம் எனும் ஊரில் ஏற்கெனவே திட்டமிட்டிருந்த கூட்டத்துக்குத் தவறாமல் சென்று வந்தேன்.

முதல் மனைவி பத்மா மரணப் படுக்கையில் கடைசி மூச்சு இழையோடக் கண் மூடிக் கிடந்தபோது, முன்பே ஒப்புக் கொண்டிருந்த புதுக்கோட்டை கூட்டத்துக்குச் சென்று பேசினேன். அன்று இரவோடு இரவாக ஒரு லாரியில் ஏறி திருவாரூர் வந்து சேர்ந்தேன். அவள் என்னைப் பிரிந்து நீங்காதத் துயில் கொண்டு விட்டாள் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ந்தேன்.

இப்படி பல நிகழ்ச்சிகள் பொது வாழ்க்கையில்...'' என்று கூறியிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com