ஒருமுறை கண்ணதாசனும் ஜெயகாந்தனும் காரில் சென்றுகொண்டிருந்தனர். ஜெயகாந்தன் ""உங்கள் பாட்டு எழுதும் தொழில் எப்படி போய் கொண்டிருக்கிறது?'' என்று கேட்க, கண்ணதாசன், ""அது "பாட்டு'க்கு போகிறது'' என்றார்.
பின்னர், கண்ணதாசன், உங்கள் கதை எழுதும் தொழில் எப்படி போய் கொண்டிருக்கிறது?' என்று கேட்க, ஜெயகாந்தனோ, ""ஏதோ "கதை' பண்ணி கொண்டிருக்கிறேன்'' என்றார்.
பாடலாசிரியரும் கதாசிரியரும் பேசினால் எவ்வளவு ருசிகரம்.