பிரபல கதாசிரியர் ஜாவர் சீதாராமனுக்கு ஞாபக மறதி அதிகம். ஒருமுறை அவர் தனது இரு கால்களிலும் இருவிதமான செருப்புகளை மாட்டிக் கொண்டு வந்தார்.
அதைக் கவனித்த ஏ.வி.எம்.சரவணன் இதை கேட்டார். இதற்கு ஜாவர் சீதாராமன் சிரித்துகொண்டே சமாளித்தார்.
"இரண்டும் என்னுடையதுதான் சார்'' என்றார்.
-அண்ணா அன்பழகன்