ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றுமா? என பெரிதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கிரிக்கெட்டுக்கு அமோக ஈர்ப்பு உள்ள நிலையில், 2011இல் இந்தியா இரண்டாவது முறையாக சாம்பியன் ஆனது. ஆனால் அதன்பின்னர் ஐசிசி கோப்பை எதையும் வெல்லவில்லை. அரையிறுதி வரை முன்னேறி தோற்று வெளியேறியிருந்தது.
இந்த நிலையில் சொந்த மண்ணில் நடைபெறுவதும், உள்ளூர் ரசிகர்களின் அமோக ஆதரவும் இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகும். இதனால் மூன்றாவது முறையாக கோப்பையை இந்தியா கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஆகியோருடன் ஷுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, ஹார்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் பேட்டிங்கிலும், பெளலிங்கில் பும்ரா, ஷமி, அஸ்வின், குல்தீப், ஆகியோரும் உள்ளது நம்பிக்கை
தருகிறது.
அதே நேரம் 5 முறை சாம்பியன் அணியான ஆஸ்திரேலியாவையும் குறைத்து மதிப்பிட முடியாது. 6ஆவது முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்தில் உள்ளது. நடப்பு சாம்பியன் பிரிட்டனும் ஒருநாள் ஆட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளாகவே அபாரமாக ஆடி வருகிறது. இதனால் பிரிட்டனும் கோப்பையை தக்க வைக்க போராடும். நியூஸிலாந்து, பாகிஸ்தான், உள்ளிட்ட அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெறும் எனக் கருதப்படுகிறது. எனினும் இறுதி ஆட்டத்தின் போது நிலவும் சூழல், அணியின் செயல்திறனைப் பொறுத்தே வெற்றி வாய்ப்பு அமையும்.
இந்திய அணியின் ஆட்டங்கள்