சித்தூர் நீதிமன்றத்தில், 1949-ஆம் ஆண்டில் ஒரு வழக்கு. சென்னப்ப கவுண்டர் என்பவர் மாட்டு வண்டியில் பயணித்தபோது இறந்தார். அவரை வேலைக்காரன் குண்டுடு கொலை செய்ததாகக் குற்றச்சாட்டு. நீதிபதி ஏ.எஸ்.பி. அய்யர் விசாரணை நடத்தினார். அப்போது குண்டு, ""சென்னப்ப கவுண்டரை நான் கொலை செய்யவில்லை. பேய் கொன்றுவிட்டது'' என்று வாக்குமூலம் அளித்தார். ""பேய் என்று எதுவும் கிடையாது. எனவே குண்டுடு மீதான குற்றச்சாட்டு உறுதியானது' என்று நீதிபதி தீர்ப்பளித்து, ஆயுள் தண்டனையை விதித்தார்.