"ஜகன்மோகன்' என்ற பெயரில் ஒரு மாத இதழை நடத்தியவர் வை.மு.கோதைநாயகி. அந்த இதழில் பாரதியார், ராஜாஜி, டி.கே.சி. ஆகியோர் எழுதியுள்ளனர் என்பது சிறப்பு.
ஒரு திரைப்படத்தின் கதை, வசனம் நூலாக வெளிவந்தது. அந்தச் சாதனையை நிகழ்த்திய படம் எது தெரியுமா? "மங்கையர்க்கரசி' என்ற படம்தான். இந்தச் சாதனையை நிகழ்த்தியவர் சுரதா.