பிரதமராக இருந்தவர்கள் ஆண்கள் என்பதால் "சார்' என்றே அழைப்பது மரபாக இருந்தது. இந்திராகாந்தி முதல் பெண் பிரதமரானவுடன் எப்படி அழைப்பது என்று பிரதமர் அலுவலகத்தில் திடீர் குழப்பம். அப்போது இந்திராகாந்தி, ""என்னை சார் என்றே அழையுங்கள். ஆணின் அறிவுக்கோ, திறமைகோ, ஆற்றலுக்கோ பெண் குறைந்தவள் அல்ல!'' என்றார்.
ஒருமுறை கவிஞர் வாலி ஒலிப்பதிவு கூடத்தில் இருந்தபோது, அங்கு வைரமுத்து வருகிறார். அப்போது அங்கிருந்த ரஜினிகாந்த் "சிங்கமும் புலியும் சந்திக்க போகிறது" என்றார். "இதில் யார் சிங்கம்! யார் புலி?" என்று யாரோ கேள்வி எழுப்ப, உடனே வாலி, ""தாடி வைத்திருப்பதால் நான் சிங்கம். வைரமுத்து புலி'' என்றார்.