முக நூலிலிருந்து....
நாம வெட்டியா இருக்கும் போது,
ஒருத்தன் போன் பண்ணமாட்டான்...
நாம தூங்கும்போது மட்டும்,
மாத்தி மாத்தி போன் பண்ணுவாங்க!
அப்படி என் தூக்கத்த கெடுக்குறதுல
உங்களுக்கு என்னடா சந்தோஷம்?
- பால முருகன் ஹிரித்திக்
அவரவர் கொள்கைப்படிஅவரவர் சொல்வதே நியாயம் என்றாகிறது...
என்றாலும், உண்மையான நியாயம்... வெல்லும் ஒரு நாள்.
- அறச் செல்வி
ரசகுல்லா கூட இருக்கிறது. ஆனால் தலைக்குப் போட முடியாது. எறும்பு மொய்த்துவிடும்.
இறைவனடி சேர ஆதார்..
மதி ஆதார் தலைவாசல்..
கல்லார் அறிவில் ஆதார்..
பிறற்குரியாள் தோள்தோய் ஆதார்..
புகழ்பட வாழ ஆதார்..
- சித்ரன் ரகுநாத்
வாழ்க்கையில கவலையே இல்லாம இருக்கணும்ன்னா...
கல்லறையிலதான் குடியேறணும்.
- கணேஷ் மணி
இணைந்தால் பிரிவு நிச்சயம் என்று தான்
தனிமையில் உலா வருகிறாளா... நிலா.
- அகல்யா அஷ்வின்
சுட்டுரையிலிருந்து...
கூட வருபவர்கள்... குறுக்கே வரமாட்டார்கள்.
குறுக்கே வருபவர்கள்... கூட வரமாட்டார்கள்.
- கவிஞர் மகுடேசுவரன்
9 மணி வரை நான் ஏன் அலுவலகம் வரவில்லையென நான் தூங்கிக்
கொண்டிருக்கும்போது மெயில் அனுப்பிக் கேட்கிறார் டேமேஜர்.
- மதுரக்காரன்
சாக்கடையில் கல்லெறிந்தால் நம் மேல் படும் என ஒதுங்கிச் செல்வதை
சாக்கடை தனக்கான பெருமையாய் நினைத்துக் கொள்கிறது
- கோதை
வலைதளத்திலிருந்து...
அறையில் அமர்ந்து கொண்டு வானம் பற்றி எழுதுகிறீர்கள்...
பார்க்க வந்த மழைத்துளிகளை அனுமதித்திருக்கலாம் ...
கதவடைத்துக்கொண்டு காகிதங்களைப் புரட்டுகிறீர்கள்.
http://raajaachandrasekar.blogspot.in