வேலை...வேலை...வேலை...(25/02/2020)

இந்திய தேசிய நெடுஞ்சாலை, தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை 
வேலை...வேலை...வேலை...(25/02/2020)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 
ஆணையத்தில் வேலை
பணி: கூட்டு ஆலோசகர் 
காலியிடங்கள்: 10
தகுதி: விவசாயம், தோட்டக்கலை அறிவியல்,வனத்துறை, சூழ்நிலை அறிவியல் போன்ற துறைகளில் பி.எஸ்சி பட்டம் பெற்று, 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 
வயதுவரம்பு: 65 வயதுக்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.75,000
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: www.nhai.org என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2020/2/19/nhai-apply-online-for-10-joint-advisor-plantation-posts-advt-details-7b22f9.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.02.2020

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை
மொத்த காலியிடங்கள்: 67
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
1. Farm Manager - 3
2. Junior Engineer (Civil) -1
3. Junior Engineer(Mechanical) -1 
4. Assistant Draughtsman(Civil)- 1 
5. Binder (Grade-II) -1
6. Boiler Man (Grade-II) -1
7. Carpenter (Grade-II) -2
8. Driver -10
9. Electrician (Grade-II) -2
10. High Tension Operator 1
11. Data Entry Operator- 2
12. Machine Operator/ Machine Man 1
13. Offset Assistant / Cameramancum-Platemaker- 2
14. Sanitary Inspector -1
15. Steno Typist(Grade-III)- 4
16. Technical Assistant - 33
17. Wireman (Grade-II) - 1
வயது வரம்பு: 31.12.2019 தேதியின்படி 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு. 
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும். 
சம்பளம்: மாதம் ரூ. 19,500 முதல் 1,13,500 வழங்கப்படும். பணிக்குத் தகுந்தவாறு மாறுபாடு கொண்டது. 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் பிசி, எம்பிசி, டிசி பிரிவினர் ரூ.500, மற்ற பிரிவினர் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறனறி தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.tanuvas.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: 
The Registrar, Tamil Nadu Veterinary and Animal Sciences University, Madhavaram Milk Colony, Chennai 600 051, India
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.tanuvas.ac.in/pdf/recruit_admn/01_2020.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 27.02.2020

அஞ்சல் துறையில் வேலை
மொத்த காலியிடங்கள்: 08
பணி: Skilled Artisans
துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Motor Vehicle Mechanic - 02
2. Welder - 02
3. Tyreman - 02
4. Tinsmith - 01
5. Blacksmith - 01
சம்பளம்: மாதம் ரூ.19,900
வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு. 
தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது 8 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: திறனறி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: www.indianpost.gov.in என்ற வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுயசான்று செய்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Senior Manager, Mail Motor Services, 134-A, S.K.Ahire MARG, Worli, Mumbai- 400 018
மேலும் விவரங்கள் அறிய: https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/MMSMumbai.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 29.02.2020

நாமக்கல் குழந்தைகள் பாதுகாப்பு 
அலுவலகத்தில் வேலை
மொத்த காலியிடங்கள்: 03 
பணி: குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் - 01 
தகுதி: சமூகவியல், சமூகப்பணி, உளவியல், குழந்தை வளர்ப்பு, குற்றவியல், கல்வியியல் ஆகிய ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன், சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 40 வயதுக்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.21,000
பணி: சமூகப்பணியாளர் - 01 
சமூகப்பணி: உளவியல், வழிகாட்டுதல், ஆற்றுப்படுத்துதல் போன்ற துறைகளில் இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 
பணி: மாதம் ரூ.14,000 
வயதுவரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும். 
பணி: உதவியாளர் மற்றும் கணினி தட்டச்சு செய்பவர் ஆப்ரேட்டர் -01 
சம்பளம்: மாதம் ரூ.10,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, டிசிஏ முடித்து ஓர் ஆண்டு பணி:: அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: https://namakkal.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 78/அ, இளங்கோ திருமண மண்டபம் அருகில், மோகனூர் ரோடு, நாமக்கல் - 637 001. 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2020/02/2020021339.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 29.02.2020
தொகுப்பு: இரா.வெங்கடேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com