குளிர்காலத்தில் சோர்வாக இருக்கும் உடலை புத்துணர்ச்சி செய்து கொள்வது அவசியமான ஒன்று! அதற்கான சில யோசனைகள்:
< மனநிலையில் இறுக்கத்தைக் குறைப்பதும் அவ்வப்போது தண்ணீர் குடிப்பதும் அவசியம்.
< உணவில் நிறைய பழங்கள், காய்கறிகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது.
< தூக்கத்தின் அளவைக் குறைக்காதிருப்பதும் உடற்பயிற்சி, தியானம் செய்வதும் உடலையும் மனதையும் எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
< அளவாய் சாப்பிடுவதுடன் அவ்வப்போது வெதுவெதுப்பான தண்ணீரில் கைகளைக் கழுவுவதும் நல்லது.
< முக்கியமாக சூரிய ஒளி உடலில் படும்படி நடப்பதால் உடலில் வைட்டமின் டி கிடைக்க ஏதுவாக அமையும். ஆனால் வறண்ட காற்று உடலில் படும்படி விடாதீர்கள்.
< குளிர்பானங்களைத் தவிருங்கள்.
< தினமும் உணவில் பருப்பு வகைகள், உலர்ந்த பழங்களைச் சேர்ப்பது நல்லது. தண்ணீர் சத்து அதிகம் கொண்ட காய்கனிகளையும் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.