ஆந்திர சினிமா சாம்ராஜ்யத்தின் ஜாம்பவான்களான நாகேஸ்வரராவ், ராமா நாயுடு. இருவரது பேரன்தான் நாக சைதன்யா. நாகேஸ்வரராவ் மகன் நாகார்ஜுனாவுக்கும் நடிகர் வெங்கடேஷின் தங்கை லட்சுமிக்கும் பிறந்தவர் நாகசைதன்யா. அதாவது நாகார்ஜுனாவின் முதல் மனைவிக்கு பிறந்தவர். எல்லாரையும் திரும்பி பார்க்க வைக்கும் இந்த குடும்பத்தின் மருமகள் ஆகிறார் சமந்தா. நாக சைதன்யா - சமந்தா காதல் வெறும் கிசுகிசுவாக காற்றில் கலந்து விடும் என்றிருந்த சமயத்தில், இருவருமே தங்களது காதலை உறுதிப்படுத்தியுள்ளனர். அடுத்த வருடம் இருவருக்கும் திருமணம் என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், சமந்தாவுடன் ஒரு மீட்டிங்...
நாக சைதன்யாவுக்கும், உங்களுக்கும் எப்போது திருமணம்...?
அடுத்த வருடம். மிகவும் ஆடம்பரமாக நடக்கும்.
உங்கள் காதல் மலர்ந்த தருணம்..?
தெலுங்கில் "மாய சேஷவ' படத்தில் நடித்த போது இருவருக்கும் நட்பு. அது பின் காதலாக மலர்ந்தது.
நாக சைதன்யா எவ்வாறு உங்களை கவர்ந்தார்...?
(சிரிக்கிறார்...) அதற்கு காரணம் உங்களுக்கு தெரியாதா.. அவர் நல்லவர். அழகானாவர்..
திருமணம் பற்றி எப்போது பேசினீர்கள்...?
நாக சைதன்யாதான் பேசினார். நான் சம்மதம் தெரிவித்தேன்.
திருமணத்துக்குப் பின் சினிமா..?
தடை விதிக்க மாட்டேன் என நாகா சொல்லியிருக்கிறார். என் முடிவு பற்றி நான் இனிதான் யோசிக்க வேண்டும்.
காதல் கைகூடியது குறித்து...?
இது என் வாழ்க்கையின் அதிர்ஷ்டம்.