மியான்மார் நாட்டின் புரட்சிப்பெண் ஆங் சான் சூகி. காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். அகிம்சையின் மூலமே நாட்டை ஜனநாயக பாதைக்கு திருப்ப வேண்டும் எனப் பாடுபட்டவர். 1989-ஆம் ஆண்டிலிருந்து, 2010 -ஆம் ஆண்டு நவம்பர் வரை, அந்த நாட்டு ராணுவ ஆட்சியால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டவர்.
1991-இல் இவருக்கு நோபல் அனுமதி பரிசு வழங்கப்பட்டது. 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மியான்மர் நாட்டின் ஸ்டேட் கவுன்சிலராக (State Counseller) ஆக உள்ளார். இது அதிபர் பதவியை விட உயர்ந்ததாகும்.
காந்தி மீதும், இந்தியா மீதும் ஆங் சான் சூகி-க்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. இதற்கு காரணம், பள்ளிப்படிப்பை இவர் டெல்லியிலுள்ள ஜீசஸ் மற்றும் மேரி பள்ளியில் முடித்தவர். அடுத்து இதே டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் பட்டம் 1946-ஆம் ஆண்டு முடித்தவர்.
- ராஜிராதா