நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சமையல்... சமையல்...: வரகரிசி இனிப்புப் பொங்கல்

கருப்பட்டியைச் சுத்தம் செய்து, பாகு காய்ச்சி வைத்துக்கொள்ளவும். திராட்சை, முந்திரிப் பருப்பு இவைகளை நெய் விட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

News image
Updated On :25 ஏப்ரல் 2018, 6:31 am

எஸ். வளர்மதி

தேவையானவை: 

வரகு - 500 கிராம்
பாசிப்பருப்பு - 100 கிராம்
கருப்பட்டி - 500 கிராம்
உலர் திராட்சை - 10
முந்திரிப் பருப்பு - 6
ஏலக்காய் - 4
நெய் - 150 கிராம்

செய்முறை:

கருப்பட்டியைச் சுத்தம் செய்து, பாகு காய்ச்சி வைத்துக்கொள்ளவும். திராட்சை, முந்திரிப் பருப்பு இவைகளை நெய் விட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வரகு, பாசிப்பருப்பு இவைகளை நன்கு கழுவி எடுத்து, 8 தம்ளர் நீர்விட்டு, நன்கு வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். வேக வைத்த வரகு, பாசிப்பருப்பு கலவையில் கருப்பட்டிப் பாகையும் கலக்கவும். திராட்சை, முந்திரி இவைகளை அக்கலவையில் போட்டு, நன்றாகக் கிண்டி பரிமாறலாம். 
இனிமையானது மட்டுமல்ல, உடலுக்கு ஊட்டம் தரும் சுவையான பொங்கல் இது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.