தங்கம் மகாலட்சுமியின் ஐஸ்வர்யமாகும். அதைக் காலில் அணிவது அதை மிதிப்பதற்கு சமம் என சாஸ்திரம் கூறுகிறது. ரயில் பிரயாணத்தின்போது அபகரிக்கப்படுவது பெரும்பாலும் காலில் அணியும் நகைகளே. கீழ் பெர்த்துகளில் உறங்கும் பெண்களின் காலிலிருந்து சுலபமாக ஜன்னலின் வழியே திருடிவிடுவார்கள்.
இது ஒருபுறம் இருந்தாலும் கணுக்காலில் எப்போதும் உராய்ந்து கொண்டிருக்கும் நகை, கணுக்கால் நாகமர்மத்தில் உராய்வதால் வாதம் பாதிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
களவு போதல், உடல்நலக் கேடு மற்றும் சாஸ்திரம் காரணமாக தங்கக் கொலுசை அணியாமல் இருப்பது நல்லதுதானே!
"இந்து மத நம்பிக்கை' எனும் நூலிலிருந்து
- வானதி ராஜமாணிக்கம்