2013 -ஆம் ஆண்டு தயாரிப்பாளர் ஆஷிக் அபுவை, கொச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் சாதாரண முறையில் குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் பதிவு திருமணம் செய்து கொண்ட நடிகை ரிமா கல்லிங்கல், தன் திருமணத்தின்போது எர்ணாகுளம் பொது மருத்துவமனையில் உள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கு ரூ.10 லட்சம் நன்கொடை அளித்திருக்கிறார். ""திருமணத்திற்கு பின் மீண்டும் நடிக்க விரும்பும் நடிகைகள் விவாகரத்து பெற வேண்டிய அவசியம் இல்லை. திருமணம் உங்கள் சுதந்திரத்தைப் பறிக்கக் கூடியது அல்ல'' என்று கூறும் ரிமா கல்லிங்கல், படங்களில் நடிப்பதுடன் பெங்களூரில் "மாமாங்கம்' என்ற பெயரில் நடன பள்ளியொன்றையும் நடத்தி வருகிறார்.