நலிந்து கிடக்கும் கைத்தறிக்கு கை கொடுக்கும் விதமாக சென்னை எத்திராஜ் கல்லூரியில் "கைத்தறி தொழில் முனைவும் கண்காட்சியும்' என்ற நிகழ்ச்சியினை சமீபத்தில், "பாரம்பரிய இந்தியா' அமைப்புடன் இணைந்து நடத்தியது. விழாவின் ஹை லைட் கைத்தறி கண்காட்சியும், "கைத்தறி ஆடை பவனி' யும்தான்.
விழாவை நடத்தியவர்களும், பங்கேற்றவர்களும், பார்வையாளர்களும் கைத்தறி ஆடைகளையே அணிந்து வந்தனர். வித்தியாசமான வேலைப்பாடுள்ள புடவைகளை உடுத்தி எத்திராஜ் கல்லூரி மாணவிகளே மேடையில் பவனி வந்த னர்.
- சுதந்திரன்