மகாராஷ்டிரா மாநிலத்தில் போரி வாலியில் 103 சதுர கி.மீ. தொலைவுக்கு அமைந்துள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் அபூர்வமான மரங்கள், தாவரங்கள், பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள் உள்ளன. இந்த பூங்காவை சுற்றுலா தலமாக பாதுகாத்துவரும் வனத்துறையினர், சுற்றுலா பயணிகள் இங்கு வரும்போது எதை செய்யலாம், செய்யக் கூடாது என்பதோடு சுற்றுச் சூழலை பாதுகாக்கவும் அறிவுறுத்த பாலிவுட் நடிகை ரவீனா டாண்டனை சிறப்பு தூதுவராக நியமித்துள்ளார். இதன்மூலம் மேலும் சுற்றுலா பயணிகளை கவரவும் வனத்துறை திட்டமிட்டுள்ளது.