திருமணத்திற்குப் பின் ரண்வீர் கபூருடன் இணைந்த தன் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வரவேற்பை அள்ளிய தீபிகா படுகோன், சமீபத்தில் தன்னுடைய அம்மா உஜாலாவுடன் இணைந்த புகைப்படத்தை, அவரை சிரிக்க வைக்க முயற்சிக்கிறேன். "அத்தனை இயற்கையானது அவரது சிரிப்பு' என்ற தலைப்பில் தீபிகா தன் இணையத்தில் வெளியிட்ட 8 மணி நேரத்திற்குள் 1-6 மில்லியன் லைக்ஸ் மற்றும் 5 ஆயிரம் காமென்ட்ûஸ பெற்றிருக்கிறார்.
அது மட்டுமின்றி தீபிகா திருமணத்தின்போது எதிர்பாராமல் வந்து கட்டியணைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய கேத்ரினா கைய்ப், தீபிகா - உஜாலா புகைப்படத்தைப் பார்த்து, "உன்னுடைய அம்மாவின் சிரிப்பு உண்மையிலேயே அழகு'' என பாராட்டியது தீபிகாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.