2014-ஆம் ஆண்டு ஜனவரியில் காலமான பெங்காலி நடிகை சுசித்ரா சென்னின் வாழ்க்கையை படமாக்கும் முயற்சி நான்காண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. இதில் சுசித்ராசென்னாக நடிக்க அவரது பேத்தி ரெய்மா சென் தயாராக இருந்தார். ஆனால் படத்தை இயக்க பொருத்தமான பெங்காலி இயக்குநர் கிடைக்காததால் படம் தயாரிப்பது தாமதமானது. "பதல்கோர்' என்ற படத்தை இயக்கிய அபிஜித் சௌத்ரியின் திறமை ரெய்மா சென்னுக்கு பிடித்திருந்ததால் படப்பிடிப்பை ஆரம்பிக்க தயாராகிவிட்டாராம். "என்னுடைய பாட்டி சுசித்ராசென் கடுமையான உழைப்பாளி என்பதோடு திரையுலகமே தன்னுடைய வாழ்க்கை என்று நேர்மையாக வாழ்ந்தவர். அப்படியொரு சக்தி வாய்ந்த பெண்
மணியை நான் பார்த்தே இல்லை'' என்கிறார் ரெய்மா.