சமையல் டிப்ஸ்...

மேரி பிஸ்கட்டைப் பொடித்து, அதனுடன் மில்க் மெய்ட் கலக்கவும். அதில் ஏலக்காய்த்தூள், சீவிய பாதாம், முந்திரி கலந்து உருட்டி அல்லது தட்டி ஃபிரிட்ஜில் ப்ரீசரில் சிறிது நேரம் வைத்து எடுத்தால் எளிய பிஸ்கட் ஸ்
சமையல் டிப்ஸ்...

மேரி பிஸ்கட்டைப் பொடித்து, அதனுடன் மில்க் மெய்ட் கலக்கவும். அதில் ஏலக்காய்த்தூள், சீவிய பாதாம், முந்திரி கலந்து உருட்டி அல்லது தட்டி ஃபிரிட்ஜில் ப்ரீசரில் சிறிது நேரம் வைத்து எடுத்தால் எளிய பிஸ்கட் ஸ்வீட் ரெடி.
• பிரட் காய்ந்துவிட்டால், அவற்றை மிக்ஸியில் அரைத்துப் பொடியாக்கி வைத்துக் கொண்டால், வறுவல், கூட்டு இவற்றில் உப்பு, காரம் அதிகமாகிவிட்டால் இந்தத் தூளைச் சிறிது தூவி, சரி செய்து விடலாம்.
• புலாவ் குழைந்துவிட்டால் 2 அல்லது 3 தட்டுக்களில் நெய்யைத் தடவி, அதில் குழைந்த புலாவை பரப்பி வையுங்கள்.புலாவ் ஆறினவுடன் ஒன்றோடொன்று ஒட்டாமல் பொல பொலவென ஆகிவிடும். இதை ஒரு வாணலியில் போட்டு சூடாக்கி எடுத்தால் சூப்பர் புலாவ் தயார்.
• தோசைமாவு, இட்லி மாவு புளித்துப் போய்விட்டால் ஒரு டம்ளர் பால் ஊற்றினால் புளிப்பு சரியாகி விடும்.
• வெங்காயத்தையும், உருளைக்கிழங்கையும் ஒரே பாத்திரத்தில் அல்லது குக்கரில் போட்டு வேக வைத்தால் சாம்பார் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.
- அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
• எந்தவிதமான சூப் செய்தாலும் ஒரு தேக்கரண்டி அவலை வறுத்து, பொடித்து அதில் சேர்த்துக் கொதிக்கவிட்டால் சூப் கெட்டியாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.
• மல்லியை ( தனியா) சிறிதளவு நெய்விட்டு வறுத்துப் பொடி செய்து, சாம்பார் செய்துமுடித்தவுடன் இந்தப் பொடியை போட்டு மூடி வைத்தால் சாம்பார் கமகமவென மணத்துடன் இருக்கும்.
• சேமியா பாயசம் செய்யும்போது சேமியா வெந்து ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்வதைத் தவிர்க்க சேமியா வெந்ததும் சர்க்கரை, பால் சேர்ப்பதற்கு முன் ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைச் சேர்க்க வேண்டும். குழைந்திருந்தாலும் தனித்தனியாக பிரிந்துவிடும். 
• பாகற்காய் குழம்பு செய்யும்போது, நாலைந்து துண்டு மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள் பாகற்காயின் கசப்பு தெரியாது. ருசியும் கூடும்.
• சிறிதளவு இஞ்சியோடு மிளகு, தேங்காய்த் துருவல், பேரீச்சம் பழம் உப்பு சேர்த்து அரைத்து தயிரில் கலந்தால் சூப்பர் சுவையில் பச்சடி தயார்.
• வற்றல் குழம்பு செய்யும்போது கடைசியில் வெங்காய வடகத்தை வறுத்துப் பொடித்துப்போட்டு கிண்டிவிட்டால் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும். 
• உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு வறுவல் செய்யும்போது, மேலாக சிறிது ரொட்டித் தூளை தூவினால் கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும். 
- சி.ஆர்.ஹரிஹரன், கேரளா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com