சோனி டிவியில் ஒளிபரப்பான குழந்தைகள் ரியாலிடி நடன நிகழ்ச்சியான "சூப்பர் டான்சர்'. பகுதி 3-க்கு நடுவராக இருந்த சில்பா ஷெட்டி, பரத நாட்டியத்தை முழுமையாக கற்றிருந்தாலும் இதுவரை அவர் நடித்த படங்கள் எதிலும் பரத நாட்டியம் ஆடியதில்லை. சூப்பர் டான்சர் நிகழ்ச்சியில் வெற்றிப் பெற்றவர்களை அறிவித்த கடைசி நாளன்று, நான்கு வித்தியாசமான பாடல்களுக்கு வித்தியாசமான உடைகள் அணிந்து நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். "இதுவரை மேடையில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்தியதே இல்லை. 25 ஆண்டுகளுக்குப் பிறகு சின்னத்திரையில் நடனமாடும் வாய்ப்பு கிடைத்தபோது, முதலில் தயக்கமாக இருந்தாலும், வாய்ப்பை இழக்க விரும்பாமல் நடனமாடினேன்'' என்று கூறினார் சில்பா ஷெட்டி.