பாலிவுட் தயாரிப்பாளரும், நடிகையுமான அனுஷ்கா சர்மா, அண்மையில் தயாரித்து வெளியிட்ட "பரி' என்ற இந்திப் படத்தை தமிழில் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். "பரி' எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் அனுஷ்காவின் புதுமையான நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. தமிழில் நயன்தாராவை நடிக்க வைக்க எடுத்த முயற்சிகள் தோல்வியடையவே, அனுஷ்கா சர்மாவே தமிழில் நடிக்க ஆலோசித்து வருகிறாராம். ஏற்கெனவே இவரை தமிழில் நடிக்க வைக்க சிலர் முயற்சித்ததும் உண்டு.