கடைசியாக தன்னுடைய அம்மா சாந்தா கோகலேயின் "ரீடா வெல்லிங்கர்' என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து "ரீடா' என்ற பெயரில் மராத்தி படத்தை இயக்கிய ரேணுகா சகானே, தற்போது "திரிபங்கா' என்ற ஹிந்திப் படத்தை இயக்கவுள்ளார். மும்பையில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் சப்னா ஆஷ்மி, மிதிலா பால்கர் ஆகியோருடன் கஜோலையும் நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார் ரேணுகா. அவர்களது ஒப்புதல் கிடைத்தவுடன் படப்பிடிப்பை தொடங்க ஏற்பாடுகள் தயாராக இருக்கிறதாம்.